தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்த "நாடுகடந்த தமிழீழ அரசு ஏன்" எனும் தலைப்பிலான கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பெப்ரவரி 4 வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பேராசிரியர் சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்க, பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு, திரைப்பட இயக்குனர் மணிவண்ணன், இந்திய தவ்ஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர்,கர்நாடக தமிழ் மக்கள் இயக்க தலைவர் ராஜன், மருத்துவர் எழிலன், அய்யநாதன், டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் உரையாற்றினர்.
நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்கள், இணையவழி தனது வாழ்த்துரையை, தோழமை மையத்துக்கு வழங்கினார்.