அதிமுகவினர் அனைவரும் ஒன்றாக இருந்தால் தான் நாம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த முடியும் என்று அமித்ஷா கணக்கு போட்டு வரும் நிலையில், அதிமுக MLA-க்களுக்கு இபிஎஸ் அளித்த விருந்து நிகழ்ச்சியை செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையனின் இந்த செயல்பாடுகள் அதிமுகவினர் மட்டுமின்றி பாஜகவினரிடையையும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சொல்கின்றனர்.