¡Sorpréndeme!

பெருந்திரளான உறவுகளோடு கொடிகாமத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

2024-11-27 164 Dailymotion

யாழ்ப்பாணம் - கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மூன்று மாவீர்ர்களின் தந்தையான கந்தசாமி ஏற்றி வைத்தார்.

பொதுச்சுடர்கள் அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.