நான் ஒரு யானை. ஆம், ரொம்பப் பெரிய உருவம்தான். ஆனால், நீங்கள் பார்த்து பயந்து செல்லும் அளவுக்கா நான் நடந்து கொள்கிறேன்? என்னை வைத்து பூஜை செய்கிறீர்கள். நீங்களே என்னை விரட்டியும் அடிக்கிறீர்கள். ஏன் என்று தெரியவில்லை! என் வீட்டில் உங்களுக்கு இடமளித்தேனே! அதுற்கு நீங்கள் கொடுத்த பரிசு என்ன?