ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மரணம் வரை மர்மம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ஜெ. ஆன்மா தன்னிடம் பேசியதாகச் சொல்லும் திருவாரூர் ஸ்ரீமகரிஷி சாமியார் கோவிந்தராஜ் என்பவர், ‘தன்னுடைய சொத்துகள், அரசுடமை ஆக்கப்பட வேண்டும், தீபா வழியில் அ.தி.மு.க-வை வழிநடத்த வேண்டும்’ என்று ஜெ. ஆன்மா கோரிக்கை வைத்தாகச் சொல்கிறார். இப்படி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் கோவிந்தராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘ஜெ. ஆன்மா பேசும்போது உங்களை நிச்சயம் தொடர்புகொள்கிறேன்’’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.