யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் சிகாகோவிலிருந்து புறப்படத் தயாராக இருந்தது. யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் சிலருக்கு விமானத்தில் உட்கார இடம் இல்லாததால் பயணிகள் சிலரை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும், யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூடுதலாக நான்கு டிக்கெட்டுகளுக்கு அனுமதி வழங்கியது தான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம் என்கின்றனர் பயணிகள்.