கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவர் தமிழரசன்(20). இவர், அருகிலுள்ள தொழுதூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை கணினி அறிவியல் இரண்டாமாண்டு படித்துவருகிறார். இதே கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிக்கும் மாணவி உஷா (19-பெயர் மாற்றம்). இருவரும் நகரப் பேருந்தில் கல்லூரிக்குச் சென்ற வகையில் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகியுள்ளனர். நாளடைவில் இவர்களின் பழக்கம், காதலாக மாறியது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ள நிலையில், வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த இருவரின் காதல் வெளியில் தெரியவந்துள்ளது.
a man has killed a robber who tried to rape his lover