¡Sorpréndeme!

தனி அலுவலர்களின் பதவிகாலத்தை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்து சட்டமுன் வடிவு நிறைவேற்றம்

2018-07-17 0 Dailymotion

2016 அக்டோபர் மாதம் 24-ம் தேதியுடன் உள்ளாட்சி பிரதிநிகளின் பதவிக்காலம் நிறைவடைந்தது. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் உள்ளதால் தற்போது வரை தேர்தல் நடைபெறவில்லை. எனவே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் வரை உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் வரும் ஜூன் 31-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், 4-வது முறையாக அவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம், அதாவது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதற்கான சட்டத்திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் தனி அலுவலர்களுக்கான பதவிக்காலம் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டதற்க்கு திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV