சென்னை கேகே நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மாணவியை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தினார். படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்தார். உயிரிழந்த மாணவியின் பெயர் அஸ்வினி என்பதாகும்.
மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த அஸ்வினி சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இன்று மதியம் கல்லூரி முடிந்து தோழிகளுடன் வெளியே வந்தார்.