விழுப்புரத்தில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது வேதனைக்குரியது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மும்பை சென்றார் கமல்ஹாசன். அவரது மகள் ஜானவி மற்றும் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார். சட்டச் சிக்கல்களால் ஸ்ரீதேவியின் உடல் மும்பைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.