கொறடா உத்தரவை மீறியதாக 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க தினகரனுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அவர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டிடிவி தினகரன். இந்நிலையில் கடந்த வாரம் எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்ட நிலையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதே கருத்தை தினகரனும் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில் இன்று சட்டசபையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. குறித்து தினகரன் எழுப்பினார். அதற்கு அவருக்கு பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் இன்று சட்டசபையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது. குறித்து தினகரன் எழுப்பினார். அதற்கு அவருக்கு பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை.
TTV Dinakaran walks out from assembly as he was not given chance to raise about 18 MLAs disqualification case.