¡Sorpréndeme!

'அன்புச்செழியன் போன்ற **** சினிமாவில் இருக்கக்கூடாது'- வீடியோ

2017-11-25 1 Dailymotion

சசிகுமாரின் மைத்துனரும், தயாரிப்பாளருமான அசோக் குமாரின் தற்கொலைக்கு ஃபைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் என அவரே கைப்பட கடிதம் எழுதி வைத்துள்ளார். அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டு அகால மரணமடைந்ததற்கு ரசிகர்கள் வருத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் ஃபைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராகப் பேசி வருகின்றனர். அதே சமயம் அன்புச்செழியனுக்கு ஆதரவாக சில இயக்குநர்களுன் நடிகர்களும் பேசி வருகிறார்கள். இதனிடையே நடிகை பூர்ணா, அசோக்கின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கெட்டவார்த்தையால் திட்டியுள்ளார். ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பணம் வாங்கி படமெடுத்த சில தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தத்தால் ஒன்று கூடி, அசோக் குமாருக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்தாமல் பைனான்சியரைக் காப்பாற்றுவதற்காக அவருக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளர் அசோக்குமார் கடைசியாகப் பணிபுரிந்த 'கொடி வீரன்' படத்தில் மூன்று நாயகிகளில் ஒரு நாயகியாக நடித்திருப்பவர் பூர்ணா. அசோக்குமார் தற்கொலை செய்த உடனேயே அவருடைய ட்விட்டரில், 'அசோக் சார், நீங்கள் சிறந்தவரிலும் சிறந்தவர். நீங்கள் நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் எங்களை விட்டுப் போக முடியாது, நீங்கள் எங்களுடனேயே இருப்பீர்கள்.' என ட்வீட் செய்திருந்தார்.

Company productions producer Ashok Kumar has committed suicide due to financier Anbuchezhiyan's threat. At the same time, some directors are also talking in favor of financier Anbuchezhiyan. Meanwhile, actress Poorna has slams anbuchezhiyan in bad words.